
பாபா அணு ஆராய்ச்சி நிலையம் |
அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல்சீற்றம், வெள்ளம், கனமழை, சூறாவளி, நில நடுக்கம், பயங்கரவாதத் தாக்குதல், தொழில்நுட்ப செயலிழப்பு, தீவிபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இதை கருத்தில் கொண்டுதான், அணு மின்நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
![]() |
கல்பாக்கம் அணுமின்நிலையம் |
அந்த அளவிற்கு இந்திய அணுமின் நிலையங்கள் மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி பயன்பாட்டை பொறுத்தவரை இந்திய தொழில்நுட்பம் உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளே பொறாமைப்படும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.
புகுஷிமாவால் பயந்த இந்தியா.
கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலை வெடித்து சிதறியதையடுத்து, உலகம் முழுவதும் அனைத்து அணு உலைகளுக்கும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ள, அனைத்து நாடுகளும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள 20 அணு மின் நிலையங்களில், இயக்கத்தில் உள்ள 18 நிலையங்களின் தன்மை குறித்து இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏ.இ.ஆர்.பி) ஆய்வு செய்யதது.
இதில், பழமையான தாராப்பூர் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவை நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த அணு உலைக்கும் பாதிப்பில்லை என்கிறது இந்த அமைப்பு.
கடலுக்கு அருகில் வைக்கப்படும் குளிர்விப்பான்களை பாதுகாக்க வேண்டும்.
இந்திய அணு உலைகள் ரிக்டர் அளவில், 6.7க்கும் மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் தானாகவே செயலழிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த நிலையிலும், கதிர்வீச்சு வெளியேறாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் மட்டம் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு உயர்ந்தால், நிலையம் தானாகவே செயலிழக்கும். இயற்கை பேரிடர் நேரத்தில் பேட்டரி மூலம் கண்காணித்து இயக்கும், நவீன தொழில்நுட்ப கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அணு உலையை சுற்றி பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. இதுதவிர இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள எந்த பகுதியிலோ அல்லது அதனால் விளைவுகள் ஏற்படும் பகுதியிலோ இந்திய அணு மின் நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.