Header Banner Advertisement

“… அதுதான் அண்ணாயிசம்”


www.villangaseithi.com

print
கடந்த, 1973 ஆம் ஆண்டு ஜுலை மாதம், சோவியத் யூனியனுக்கு போய் விட்டு திரும்பிய எம்.ஜி.ஆர்., ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையை பற்றி தீவிரமாய் சிந்தித்தார். அண்ணா துரையின் பெயரால், தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போல, கட்சியின் கொள்கைக்கும் ஏதாவது ஒரு பெயர் சூட்ட வேண்டும், அதிலும் அண்ணாதுரையின் பெயர் பொதிந்திருக்க வேண்டுமென எண்ணினார். அப்படி அவரது சிந்தனையில் உருவானதுதான், ‘அண்ணாயிசம்!’

தம் கட்சிக் கொள்கைக்கு ரத்தின சுருக்கமாக, ‘அண்ணாயிசம்’ என்று பெயர் சூட்டிய எம்.ஜி.ஆர்., அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார். 1973 ஆம் ஆண்டு, செப்டம்பர் 29 ஆம் தேதி இரவு, யு.என்.ஐ., மற்றும் பி.டி.ஐ., செய்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு, நிருபர்களை அனுப்பி வைக்கு மாறு கூறினார். நிருபர்கள் வந்ததும், ‘அ.தி.மு.க.,வின் கொள்கை அண்ணா யிசம். இதை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்’ என்றார்.

திடீரென அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்லுகிறாரே என்று நிருபர் கள் திகைத்தனர். அதை கண்ட எம்.ஜி.ஆர்., ‘ஏன் மாவோயிசம், மார்க்சிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றை போன்றதுதான் அண்ணாயிசமும்’ என்றார். மறுநாள் இந்த செய்தி, பத்திரிகைகளில் வெளி யானது. உடனே மற்ற நிருபர்கள் எம்.ஜி.ஆரின் தி.நகர் அலுவலகத்திற்கு படையெடுத்தனர். ‘அண்ணாயிசம் என்றால் என்ன?’ என்று கேட்டனர்.

‘காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய மூன்று கொள்கை தத்துவங்களில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் என்ன கிடைக் குமோ அதுதான் அண்ணாயிசம்’ என்று விளக்கமளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி. ஆரின் அண்ணாயிசத்தை சிலர் பாராட்டினர்; சிலர் புரியவில்லை என்றனர்; சிலர் குறை கூறினர். ஆனால், தமிழக மக்களோ அண்ணாயிசத்தின் அடிப்படை என்று தங்களுக்கு தாங்களே ஒரு விளக்கம் கூறிக் கொண்டு அதை ஏற்றுக் கொண்டனர்.