
உய்யக் கொண்டான் ஆற்றின் கரையில் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெளிகண்ட நாதர் கோயில் அமைந்துள்ளது.
தலச் சிறப்பு
இது சிவத்தலமாக இருந்தாலும் இங்குள்ள மகாமண்டபத்தில் கருடாழ்வார் திருமேனி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
கன்னியர்கள் நல்ல கணவனைப் பெறவும், திருமணத் தடை நீங்கவும், தங்களைப் பிடித்துள்ள பில்லி, சூனியம் விலகவும், வியாபாரத்தில் அபிவிருத்தியாகவும், தீவினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், மறைமுகமாக வரும் எதிர்ப்புகள் விலகவும், பிற பாதிப்புகள் யாவும் நீங்கவும் இங்குள்ள சுவாமியை வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.