
1740 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதான் இருந்ததாம். இங்கிலாந்தில் இருந்துதான் அங்கு புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்.! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு நூலகம் இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனத்தில் தோன்றியது.
அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கி னார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து,2 ஆண்டு களில் பெரிய நூலகமாக மாற்றினார்கள். அமெரிக்கா வில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள்.அதன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன. நூலகம் தோன்றக் காரணமாக இருந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற அறிஞராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.