Header Banner Advertisement

இதான்யா காதல்…!


www.villangaseithi.com

print
முதலில் காதல் ஆண்களின் கண் வழியாகவும், பெண்களின் காது வழியாகவும் நுழைகிறது என்கிறது போலந்து நாட்டு பழமொழி. அதேசமயம், இளம் காதலர்கள் விரும்புகிறார்கள். விவேகமானவர்கள் வருந்துகிறார்கள் என்கிறது இந்திய பழமொழி. காதல் ஒருவிநாடி, ஆனால், துக்கம் வாழ்க்கை முழுவதும் என்கிறது அரேபிய பழமொழி. காதல் செய்யும் பெண், நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி என்கிறது பிரான்ஸ் நாட்டு பழமொழி. கல்வீடு என்பது சுவர்களாலும், தூண்களாலும் ஆனது, காதல்வீடு என்பது அன்பும், கனவும் நிறைந்தது என்கிறது இந்திய பழமொழி.
காதலைப் பற்றிப் பேசும்போது பலமாகப் பேசாதீர்கள் மெதுவாகப் பேசுங்கள் என்கிறார் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவை இல்லை. காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். அதேநேரத்தில், அழகைப் பார்த்து வருவதில்லை காதல். ஆனால் காதலிக்கப்படுபவர்கள் எல்லோரும் அழகானவர்கள் என்கிறது இந்திய பழமொழி. இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். உண்மையான காதலுக்கு முதுமையே கிடையாது. காதலுக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் அதை அழிக்க முடியாது. காதலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒருவர் மீது ஒருவர் அவர்களே தானாக காதல் வலையில் சிக்குகிறார்கள்.