Header Banner Advertisement

இந்திய தபால்துறை பற்றி தெரியுமா?


www.villangaseithi.com

print
1. உலக தபால்தினம் கொண்டாடப்படும் நாள் அக்டோபர் 10.

2. அரசு பணிகளுக்காக 1766ல் தொடங்கப்பட்ட தபால்துறை, 1847ல் பொது மக்களின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 781 தபால் அலுவலங்கள் உள்ளன. இவற்றில் 89 விழுக்காடு கிராமங்களில் இயங்கி வருகின்றன.

3. ‘போஸ்ட் மேன்’ என்ற பதவியின் பெயர் 1880 ஆம் ஆண்டில் ஹென்றி பாக்கெட் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். இதற்குமுன், ‘லெட்டர் கேரியர்’ எனும் பெயரில்தான் தபால்காரர்கள் அழைக்கப்பட்டனர்.

4. முதல் தபால் தலை கண்காட்சி கொல்கத்தாவில் நடந்தது.

5. ஒட்டும் தபால் தலைகள் முதன்முதலில் 1840 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. தபால் அலுவங்கள் குறைவாக உள்ள மாநிலம் சிக்கிம்.

7. இந்தியாவில் தபால்தலை முதன் முதலில் வெளியான ஆண்டு 1852.

8. முதன்முதலில் அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா.

9. அஞ்சல் சேமிப்பும், மணி ஆர்டர் முறையும் 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

10. தபால் அலுவலகங்கள் அதிகமாக உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம்.

11. ஏர் மெயில் அஞ்சல் தலை முதன் முதலாக 1929 ல் வெளியிடப்பட்டது.

12. உலக தபால் யூனியன் தலைமையகம் பெர்ன், சுவிட்சர்லாந்து.

13. சுதந்திர இந்தியாவில் முதல் அஞ்சல் தலையின் பெயர் ஜெய்ஹிந்த். 1947 நவம்பர் 21ந் தேதி வெளியிடப்பட்டது.

14. உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையைக் கொண்டநாடு இந்தியா.

15. பின்கோடு முறை 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி அமலுக்கு வந்தது.

16. இந்திய தபால் தலைகளில் முதன் முதலில் அஞ்சல் தலையில் இடம் பெற்ற தேசிய தலைவர் மகாத்மா காந்தி.

17. தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

18. 1851ல் தந்தி நடைமுறைக்கு வந்து, 1867 முதல் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டது.

19. தந்தி தொலைபேசி முறையை அறிமுகப்படுத்தியவர் வார்டு காரன் வாலிஸ்.

20. 1911 பிப்ரவரி 18 ஆம் தேதி முதன் முதலில் தபால்கள் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

21. துரித தபால் சேவை 1975 ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.