
![]() |
சுடோமு யாமகுச்சி |
1916-ல் பிறந்த இவர். நாகசாகி நகரில் உள்ள ‘மிட்சுபிசி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப்பார்த்து வந்தார். 1945-ம் ஆண்டு அந்த நிறுவனம் ஹிரோஷிமாவில் இருக்கும் தனது துணை நிறுவன வேலை விஷயமாக யாமகுச்சியை அங்கு அனுப்பிவைத்தது.
![]() |
அணுகுண்டு வீச்சுக்கு முன்பு யாமகுச்சி |
வெகுதூரம் நடந்து வந்தபின் தான் தனது பயணச்சீட்டை அந்த நிறுவனத்திலேயே வைத்துவிட்டது நினைவுக்கு வந்தது. உடனே நினைவுக்கு வர யாமகுச்சி மட்டும் தனது பணியிடம் வந்து, பயணசீட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
அப்போது காலை 8.15 மணி.
இரண்டு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்ட யாமகுச்சி உடல் கொஞ்சம் தேறியது. மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் இருந்ததாலும், யாமகுச்சியை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தாலும், அவரை அவரது சொந்த ஊரான நாகசாகிக்கு மருத்துவர்கள் மாற்றினார்கள்.
மறுநாள் காலை 11 மணி.
அவர் தனது மேலதிகாரியிடம் ஹிரோஷிமா குண்டுவீச்சில் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க போர் விமானம் ‘பேட் மேன்’ என்ற இரண்டாவது அணுகுண்டை வீசியது. இதுவும் யாமகுச்சி இருந்த இடத்தில் இருந்து சரியாய் 3 கி.மீ. தொலைவில் நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை எந்தவித காயமும் இல்லாமல் யாமகுச்சி தப்பிவிட்டார். ஆனால் அந்த கொடுமையான சத்தம் அவர் காதை மீண்டும் பதம் பார்த்து, அவரை ஒரு வாரத்திற்கு காய்ச்சலில் படுக்க வைத்துவிட்டது.
![]() |
நெருப்பு வடுக்கள் |
2010, ஜனவரி 4-ல் தனது 93-வது வயதில் கிட்னி மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் யாமகுச்சி மரணமடைந்தார். உண்மையில் இரண்டு அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்த ஆச்சரியமான மனிதர்தான் சுடோமு யாமகுச்சி.