Header Banner Advertisement

இவர்களா கட்சித் தலைவர்கள்?


www.villangaseithi.com

print
ஈ.வெ.ராமசாமி: பெரியாரிடம் சலியாத உழைப்பிருந்தது. கொச்சையான பாஷை இருந்தது. பலர் சொல்லத் தயங்கிய விசயங்களை அவர் சொன் னார். ஆனால், அவரைப் பொறுத்தவரை ஒரு சுயேச்சையான அபிப்பி ராயக்காரராக மட்டும் இல்லாமல், மற்ற யாரையும் நம்புவதில்லை. ‘யாரும் யோக்கியர் இல்லை’ என்று கூறியபடி சம்பாதிக்கின்ற ஒருவராகவே காட்சி யளித்தார். கடைசி வரை அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
அண்ணாதுரை: அண்ணா மிகவும் உத்தமமானவர். தங்கமானவர். பழகுவதற்கு அவரைவிட இனிமை யானவர் கிடையாது. என் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் முதல் கண்ணீர் அவரின் கண்களில் இருந்துதான் வரும். அன்புக்கு உறைவிடம். அற்புதமான பேச்சாளர். ஆனால், ஒரு கட்சியின் தலை வராக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், மற்றவர்களை கட்டி மேய்க்கவும் இயலாதவராகவே அவர் விளங்கினார். அதனால்தான், ‘கட்டுப்பாடு’ என்ற கோசத்தோடு தி.மு.க., விளங்கிற்று. ஆகவேதான், அவரை மீறிக்கொண்டு கருணாநிதி உருவாக முடிந்தது.
காமராஜர்: நாணயம், திறமை இரண்டும் அவரிடம் குடிகொண்டிருந்தன. ஆனால், ஒரே ஒரு சுபாவம் அவரிடம் காணப்பட்டது. இன்னொருவன் மேலேறி வரும்பொழுது, அவனை தலையில் தட்டி வைத்துக் கொண்டே இருப்பதுதான் ராஜதந்திரம் என்பது. ஆனால், அதை என்னிடம் காட்டிய தில்லை. மற்ற தலைவர் களோடு ஒப்பிடுகையில் அவர் உன்னதமானவர், உயர்ந்தவர்.
கருணாநிதி: கருணாநிதியை ஒரு தலைவராக பார்த்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, ‘பணம் கிடைத்தால் குடும்பத்திற்கு, பதவி கிடைத்தால் மருமகனுக்கு’ என்று வாழ்க்கை நடத்துபவராகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறார். வீட்டை மறந்து நாட்டுக்குப் பாடுபட்டவராக அவர் ஒரு காலத்திலேயும் வாழ்ந்ததில்லை.
அரசியலிலும் சரி, சாதாரண காலங்களிலும் சரி, முக்கியமான நேரங் களிலும் சரி, தனக்கு, தனக்கு என்பதிலேயேதான் முக்கியமாக இருப்பார். அந்த நினைவுகள்தான் அவருக்கு இருக்கும். எழுத்தாளர் என்றால் தான் தான்; கலைஞர் என்றால் தான் தான்; நடிகன் என்றால் தான் என்றுதான் உலகத்தைக் கணித்தாரே தவிர, பிறருக்கும் அந்த திறமை உண்டு என அவர் ஒரு நாளும் மதித்ததில்லை.