Header Banner Advertisement

எப்படி உள்ளது கூடங்குளம்?


www.villangaseithi.com

print
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க, 1988ல் இந்திய பிரதமர் ராஜிவ் மற்றும் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோர் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்டு, வி.வி.இ.ஆர்.-1000 என்ற தொழில் நுட்பத்துடன் பணிகள் தொடங்கப்பட்டன. இந்திய அணுமின் கழகத்தின் 13 ஆயிரத்து 171கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கின.

இரண்டு யூனிட்களில், தலா 1000மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும், 3, 4 ,5, 6 என தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுள்ள நான்கு அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த 2001ல் அணு நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி 2007ல் முடிந்தன.

பின்னர், தொழில்நுட்ப ரீதியான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2007ல் கொதிகலன் நிறுவப் பட்டது. அணுமின் உற்பத்திக்கான கருவிகள் 2008ல் நிறுவப்பட்டு, எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு நடுவங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, கட்டுமான பணிகள், கருவிகள் பொருத்துதல் என அனைத்தும் முடிந்து, முதல் யூனிட்டில் மின் உற்பத்தி செய்வதற்கான ஒத்திகை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல் ஒரு யூனிட்டிலும், அடுத்த ஆண்டில் இரண்டாம் யூனிட்டிலும் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கூடங்குளம் அணு மின்நிலையம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரே நேரத்தில், எந்த சுற்றுச் சூழல் சீர்கேடும் இல்லாமல் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உகந்த திட்டம் என கூறப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தால் மக்களுக்கோ, சுற்றுப்புறத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லை என அணுமின் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணுமின்நிலையத்தின் இயல்புநிலை குளிர்விப்பான் 40 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்திலிருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணுமின்நிலைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருவதால், பாதுகாப்பு காரணங்க ளுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாப அணுமின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறது.

இருபது ஆண்டுகளாக கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம், வெற்றிகரமாக உற்பத்தியை தொடங்கியுள்ள நிலையில் திடீர் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து நடுவண் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.