
கருணைக்கிழங்கு பழைய கிழங்காக இருந்தால் அரிக்காமல் இருக்கும். மேல்த் தோலை கீறிப் பார்த்து, உள்ளே சிவப்பாக இருந்தால் புதிது. அப்படி இருந்தாலும் வாங்கி வீட்டில்வைத்து, 20 அல்லது 25 நாள்களுக்குப் பிறகுஓரளவு உள்பகுதி வெள்ளையானதும் உபயோகிக்கலாம்.
அதற்கு மேலும் காரல், அரிப்பு இல்லாமல் இருக்க, எப்பொழுதும் கருணைக்கிழங்கை அரிசிகளைந்த நீரிலேயே வேகவைக்க வேண்டும்.
மூலநோய்க்கு மிகவும் நம்பிக்கையான மருந்து என்று சொல்கிறார்கள்.
தேவையான பொருள்கள்:
கருணைக் கிழங்கு – 1/4 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
கிழங்கைக் கழுவி அப்படியே முழுதாக அரிசி களைந்த நீரில் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
ஆறியதும் மேல் தோலை நீக்கி, கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
புளியை நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நிதானமான தீயில் சேர்ந்தாற்போல் வரும்வரை கொதிக்கவிடவும்.
குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும்.
கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய், பருப்பு கலந்த சாதம், தயிர் சாதம், உப்புமா, பொங்கல் வகைகள்…