Header Banner Advertisement

காதலின் சின்னமா தாஜ்மஹால்?


www.villangaseithi.com

print
காதல் என்றாலே எல்லோருக்கும் நிச்சயம் நினைவுக்கு வரும் ஒரு விசயம் தாஜ் மஹால். அதனை காதலின் சின்னமாக எல்லோரும் கருதுகிறோம். மிகவும் அற்புத மாக வடிவமைக்கப்பட்ட நினைவகம் புகைப்படத்தில் பார்க்கும் போதே மிகவும் ரம்மிய மாக உணருகிறோம். அதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கி றது. தாஜ்மஹாலை உலக அதிசயங்களில் ஒன்றாக அதன் கட்டடக் கலைக்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் அதனை காதலின் சின்னமாக அறிவித்தது யார்? ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்திருந்த காதலால் கட்டியதுதான் தாஜ்மஹால் என்று நாம் நினைத்திருக்கி றோம். ஆனால் உண்மை அதுவா? ஷாஜகான் மும்தாஜின் இரண்டாவது கணவர். மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாவது மனைவி. இதுதவிர பல மனைவிகள் உண்டு. மும்தாஜ் அவளது 14 ஆவது குழந்தை பிறக்கும்போது இறந்தாள். ஷாஜகான் பெண்களுக்கான தேடல் அதிகம் கொண்டவர். அவருடைய அரசவை யில் அழகான பெண்களுக்கென்றே ஒரு இடம் வைத்திருந்தார். அங்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது.
ஆனால் அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி. தாஜ்மஹாலை கட்டி முடித்தவுடன் இதேபோன்று இன்னொரு கட்டடம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு பணிபுரிந்த 22,000 பணியாளர்களின் கைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும் கட்டட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டிக்கொலை செய்திருக்கிறார் ஷாஜகான். தன்னுடைய மகள் ஜஹானாரா பேகமுடன் முறை தவறிய உறவு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட விசயங் களில் எங்கு காதல் இருக்கிறது? இத்தனை பேரை கொடுமைப்படுத்தி கட்டப்பட்ட கல்லறை எப்படி காதலின் சின்னமாகும்?