Header Banner Advertisement

காம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு


www.villangaseithi.com

print
பெண்கள் குழந்தைகள் பெற்றுத்தரும் இயந்திரம் அல்ல என்று பெண்ணியவாதிகள் உரக்க குரல் கொடுத்தாலும், இயற்கை என்னவோ பெண்ணை ஒரு குழந்தை பெறும் இயந்திரமாகத்தான் படைத்திருக்கிறது போலும். முன்பெல்லாம் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய பெண்களுக்கு மாதவிலக்கு  பிரச்சனையாக இருக்கிறது.
இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பெண்கள் பெரும்பாலும் கர்ப்பமான நிலையிலேயே இருந்தார்கள். அதனால் அன்றைய பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் 10 முதல் 20 தடவைகள் மட்டுமே மாதவிலக்கு பிரச்னையை சந்தித்து வந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் ஒரு வருடத்திற்கு 13 முறை மாதவிலக்கை அனுபவிக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு 2 முதல் 4 குழந்தைகள் இருந்தால் அவள் தன் வாழ்நாளில் 350 முதல் 400 முறையும், குழந்தை இல்லாத பெண்கள் என்றால் 500 முறையும் மாதவிலக்கை சந்திக்கிறார்கள்.

கருத்தடை மாத்திரைகள் வந்த பின் தான் பெண்களுக்கு மாதவிலக்குக்குப் பின் உணர்வு ரீதியான ஏற்ற இறக்கம் உண்டு என்பதை கண்டறிந்தனர். மாதவிலக்கு முடிந்த முதல் நாளில் இருந்து 21 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல எண்ணங்களை, மகிழ்வான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பாசிட்டிவான மனநிலையை உண்டாக்குகின்றன.

பெண்ணின் காம உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. மாத சுழற்சியின் நடுவில் கருமுட்டை வெளிப்படும் நாளில் அவளது காமம் உச்சக்கட்டத்தை அடைகிறது. அப்போதுதான் அவளது உடலில் டெஸ்ட்ரோஜன் என்ற ஆணுக்கான ஹார்மோன் அதிகமாக சுரக்கத்தொடங்குகிறது. இந்த ஹார்மோன் அதன் இயல்பான காம உணர்வை மேலும் தூண்டிவிடுகிறது.

இயற்கை மிக அற்புதமானது. பெண் விலங்குகளும் மாதவிலக்கு காலகட்டகங்களில் இது போன்ற உணர்வை சந்திக்கின்றன. அவைகளும் கருமுட்டை வெளிப்படும் காலங்களில் மட்டுமே அவைகள் ஆண் விலங்குகளை வலுக்கட்டாயமாக உறவுக்கு இழுக்கும். மனித இனத்தில் பெண்ணுக்கும் இதே உணர்வு உண்டு.

ஒரு பெண் மிக உன்னிப்பாக தனது உணர்வுகளை கவனித்தாலே போதும். அவள் உடலில் கருமுட்டை வெளியாகும் நேரத்தை சரியாக கணிக்க முடியும். அந்த நாளில் பெண் இயல்புக்கு மீறி உற்சாகமாக இருப்பாள். இனிமையாக பழகுவாள். ஆண்கள் மீது மதிப்பும் மரியாதையும் இனம் புரியாத ஒரு ஈர்ப்பும் ஏற்படும். ஆண்கள் மிகவும் நல்லவர்கள் என்ற நேர்மறையான சிந்தனை மலரும். தன்னை மிக அழகாக மாற்றிக் கொள்வாள். ஒரு ஆணிடம் தன்னை ஒப்படைக்க துடிப்பாள். இது எல்லாமே வெளிப்பட்டிருக்கும் கருமுட்டையை கருவாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள்தான் என்று உளவியல் கூறுகிறது.

இயற்கை இப்படியெல்லாம் பல மாற்றங்களை உருவாக்கினாலும் உலகம் ஒரு பெண் தாய்மையடைய ஏகப்பட்ட சம்பிரதாயங்களை வைத்திருக்கிறது. அதை மீறும் பெண்ணை சமூகம் நடத்தை மூலம் விமர்சிக்கிறது. பக்குவமற்ற கன்னிப்பெண்கள் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். கருமுட்டை வெளிப்படும் காலத்தை கட்டுப்பாட்டோடு கடக்க வேண்டும்.

மேலைநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி காதலர்கள் எல்லைமீறி உறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவது இந்த கருமுட்டை வெளிப்படும் நாளில்தான் என்று கூறுகிறது. எது எப்படி நடந்தாலும் பாதிப்பு பெண்ணுக்கு மட்டுமே என்பதால் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.