
![]() |
கஜினி முகமது |
கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படைஎடுத்தார் அல்லவா? அப்போது, கைபர் பாதையைக் கடந்துதான் இந்தியாவுக்குள் வந்து இருக்கிறார். “கஜினியின் நோக்கம் நாடு பிடிப்பது இல்லை; கோயில்களில் கொள்ள அடிப்பதுதான்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் எம்.ஆர்.ராஜகோபாலன். இவரது ஆய்வுப்படி, “கஜினி முகமது 16 முறை தோல்வி அடையவில்லை. அத்தனை போரிலும் கஜினி ஜெயித்து இருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார். அதோடு, இந்தப் படையெடுப்புகளின் விரிவான பட்டியலையும் முன்வைக்கிறார்.
கஜினியின் முதல் படையெடுப்பு கைபர் கணவாயை ஒட்டிய இந்தியாவின் எல்லை நகரங்களின் மீதான தாக்குதல். 2 கி.பி. 1001-ல் பெஷாவர் நகரங்களின் மீதான தாக்குதல். 3. பீராவின் மீது. 4. மூல்தான் மீதான தாக்குதல். இவை நடந்தது கி.பி. 1006-ல். அதன் பிறகு, 5. படையெடுப்பு நவாஸாவின் மீது. 6. நாகர்கோட். 7. நாராயண். 8. மறுபடியும் மூல்தான். 9. நிந்துனா. 10 தானேசர். 11.லோக்காட். 12. மதுரா மற்றும் கனோஜீ. 13. ராகிப். 14. லோக்காட் மற்றும் லாஹோர். 15. குவாலியர். 16. சோம்நாத். 17-வது முறை ஜாட் மன்னர்கள் மீது படை எடுத்துச் சென்று வென்று இருக்கிறான்.