Header Banner Advertisement

ஜனாதிபதியானார் பத்திரிகையாளர்.!


www.villangaseithi.com

print
நாட்டின் 14 ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் அரசியலில் நுழைந்து காங்கிரசில் படிப்படியாக முன்னேறியவர். இவருடைய ‘பிரதமர் கனவு’ நிறைவேறாவிட்டாலும் அதைவிட உயரிய பதவி இன்றைக்கு கிடைத்திருக்கிறது.

பத்திரிகையாளர்:

மேற்குவங்க மாநிலம் மிர்தி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த பிரணாப், 3 முதுகலைப் பட்டங்களைப் பெற்று கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர்.அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆசிரியர், பத்திரிகை யாளராக பணியாற்றியுள்ளார். 1960-ல் காங்கிரசில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 1969ல் மாநிலங்களவை உறுப்பினரானார்.

1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் மறைவுக்குப் பின், பிரதமராக விரும்பினார். ஆனால், அந்த ஆசை நிறைவேறாததால், அதிருப்தியடைந்து காங்கிரசிலிருந்து வெளியேறி கட்சி தொடங்கி, சிறிது காலத்துக்குப் பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்தார். நடமாடும் தகவல் களஞ்சியம், அரசியல் சாணக்கியர் என அறியப்பட்ட பிரணாப், கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளிடையேயும் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் சமாதானத் தூதுவராக செயல்பட்டார்.

முதல் குடிமகன் :

1973ஆம் ஆண்டு நடுவண் அரசில் தொழில் வளர்ச்சித்துறை இணை யமைச்சரான பிராணாப், அதன்பின்னர் நிதி. பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம், என பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக 5 நூல்களை படைத்துள்ள பிரணாப் முகர்ஜி, சிறந்த நாடாளுமன்றவாதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று இன்று நாட்டின் முதல் குடிமகன் என்ற உயரிய பதவியை அடைந்துள்ளார்.