Header Banner Advertisement

“தனித்தன்மை” என்றும் குறைவதில்லை.!


www.villangaseithi.com

print
200 பேர் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளர் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி, “யாருக்கு இது பிடிக்கும்” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்கும் என கைகளைத் தூக்கினர். பேச்சாளர், “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால் அதற்கு முன்…” என சொல்லி, அந்த 500 ரூபாய் நோட்டை கசக்கி சுருட்டினார்.
பிறகு அதை சரிசெய்து, “இப்போதும் இதன் மீது உங்களுக்கு மதிப்பு இருக்கிறதா?” என்றார். அனைவரும் கைகளைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டைக் காட்டி, “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா” என்றார். அனைவரும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் தோல்விகளைச் சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.”

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதன்மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்க்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும்தான் உரமும் பூச்சிக்கொல்லியும். ஆகையால் தன்னம் பிக்கையை இழக்காமல் வாழுங்கள்” என்றார்.
(நான் கல்லூரியில் படித்த போது N.S.S. வகுப்பில் 10 நாட்கள் மயிலாடுதுறை அடுத்த கோழிக்குத்தி என்ற கிராமத்தில் பணியாற்றினேன். அப்போது மாலை நேரத்தில் தன்னம்பிக்கை குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது. அப்போது, இந்தக் கதையை கேட்க நேரிட்டது. தற்போது இதனை தற்செயலாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.)