Header Banner Advertisement

தாஜ்மஹாலை கட்டிய வரலாறு


www.villangaseithi.com

print
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலைக் கட்டியவர் ஷாஜகான். தமது மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும். எத்தகு சூழ்நிலையில், யாருடைய கற்பனையில் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டது என்பது தெரியுமா? ஈரான் நாட்டில் சிராசி என்ற சிற்பி வாழ்ந்து வந்தார். பிறரின் முகத்தினைப் பார்க்காமலேயே சிற்பங்களைச் செதுக்குவதில் வல்லவர். சிராசியின் திறமையைக் கேள்விப்பட்ட மன்னர் ஷாஜகான் அவரை டில்லிக்கு வரவழைத்தார்.

சிற்பியை நோக்கி, உமது திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை நிரூபிக்குமாறு எனக்கு ஒரு சிற்பத்தை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார் மன்னர். இதனைக் கேட்ட சிற்பி, சிற்பம் வடித்துத் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. உங்கள் நாட்டில் உள்ள 25 அழகான பெண்களைத் திரையின் மறைவில் நிறுத்துங்கள். அவர்களின் கையை மட்டும் நான் பிடித்துப் பார்ப்பேன். யாருடைய கை எனக்குப் பிடிக்கிறதோ அப்பெண்ணின் உருவத்தை, அப்பெண்ணைப் பார்க்கா மலேயே சிற்பமாகச் செதுக்கித் தருவேன்.

மேலும், நான் யாருடைய சிலையைச் செதுக்குகிறேனோ, அப்பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்றார் சிற்பி. மன்னரும் சிற்பியின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டார். முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்து மட்டும் எப்படி சிற்பம் வடிக்க முடியும் என்ற பேச்சு டில்லி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட மன்னரின் மகளும் போட்டியைக் காண வந்திருந்தாள். அழகிய பெண்கள் அனைவரும் திரைமறைவில் நிறுத்தப்பட்டு, சிற்பி கையினைப் பிடித்துப் பார்க்கும் நாளும் வந்தது.

திரை மறைவில் நின்ற பெண்களின் வரிசையில், கடைசியாக மன்னரின் மகளும் சென்று விளையாட்டாக நின்றாள். திரைமறைவில் நின்ற பெண்கள் ஒவ்வொரு வராகக் கையை நீட்ட, சிற்பி கையைப் பிடித்துப் பார்த்தார். கடைசியாக நின்ற பெண்ணின் கையைப் பிடித்துப் பார்த்த போது, இந்த உருவத்தைச் சிலையமைத்துத் தருகிறேன் என்றார். சிற்பி தேர்வு செய்த கை யாருடையது என்பதைப் பார்க்க ஆர்வத்துடன் உள்ளே சென்றார் மன்னர். அது அவருடைய மகளின் கை என்று தெரிந்ததும், தன் மகளிடம் முகம் பார்க்காமல் சிலை வடிக்க முடியாது என்று சமாதானம் கூறி அழைத்துச் சென்றார்.

மன்னரின் மகளோ, வேடிக்கையாகப் போய் நிற்க அது விபரீதமாக முடிந்து விட்டதே என்று அஞ்சினார். சிற்பி, மூன்று மாதங்களில் சிலையினை வடிவமைத்து முடித்தார். மன்னரையும், மந்திரிகளையும், சபையோரையும் அழைத்துவந்து காட்டினார். மன்னரின் மகளை நகல் எடுத்தது போல இருந்த சிலையினைக் கண்டு அனைவரும் பிரமித்து நின்றனர்.சிலையில் ஏதாவதொரு குறையினைச் சுட்டிக்காட்டி ஒதுக்கி விடலாம் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தவர்கள் தோல்வியே கண்டனர்.

மன்னருக்கோ கொடுத்த வாக்கை எப்படி மீறுவதென்று தெரியவில்லை. மன்னரின் மனைவி மும்தாஜோ, ஓர் ஏழைச் சிற்பிக்குத் தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதா என்ற கவலையிலேயே உடல்நலம் குன்றி இறந்தார். மனைவியின் இறப்பு, ஷாஜகானைத்தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. அவசரப்பட்டு வாக்குக் கொடுத்து விட்டோமே என நினைத்து வருந்தினார் மன்னர். அரச குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்த சிற்பி மன்னரை அழைத்தார். மன்னா! தங்கள் மனைவியின் இறப்பிற்கு நான் காரணமாக அமைந்துவிட்டேன்.

எனவே, தாங்கள் தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றார். ஆனால், மன்னர் இதற்கு உடன்படவில்லை. கொடுத்த வாக்கு கொடுத்தது தான். அதேநேரத்தில் எனது மனைவிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அந்தச் சிற்பியை வைத்தே கலைநயமிக்க தாஜ்மஹாலைக் கட்டினார்.