Header Banner Advertisement

தாஜ்மஹால் இடிந்துவிழுமா?


www.villangaseithi.com

print

உலக அதிசயங்களால் ஒன்றான தாஜ்மஹால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 358 ஆண்டு கால பழமை வாய்ந்த சலவைக்கல் சமாதியை (தாஜ்மஹால்) பார்வையிட ஆண்டு தோறும் ஆக்ராவிற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

யமுனை நதி நாளுக்கு நாள் மாசுப்படுதலும், தொழிற்சாலைப் பெருக்கமும், காடுகள் அழிப்பும் தாஜ்மஹாலை அழித்துவிடும் என்று விழிப்புணர்வு ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், சமாதியில் விரிசல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கட்டுமானம் மேலும் தளர்ந்து வருகின்றது. அது மிகவும் பலவீனமாக உள்ளது. சுற்றியுள்ள நான்கு தூண்களும் ஆட்டம் கண்டு வருகின்றன எனவும் விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.