Header Banner Advertisement

திருவாதிரைக் களி செய்முறை


002

print

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 3 கப்*
தேங்காய் – 1 மூடி (பெரியது)
தண்ணீர் – 9 கப்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி

செய்முறை:

பச்சரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுத்து ரவை மாதிரி அரைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, அரைத்துவைத்துள்ள அரிசி, பருப்புப் பொடிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறவும்.

நன்றாக சேர்ந்து வந்ததும் குக்கரில் 6,7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும்.
நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் களியுடன் சேர்க்கவும்.

இந்தக் களி மிதமான இனிப்பாக இருக்க வேண்டும். என்னைப் போல் அரைகுறை இனிப்புப் பிடிக்காதவர்கள் 4 கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி பருப்பை ரவை மாதிரி அரைத்து மாவில்லாமல் சலித்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கிளறும்போது கட்டிதட்டிக் கொள்ளும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்தக் களிக்கு, காரசாரமான திருவாதிரைக் கூட்டு எந்த விதத்தில் மேட்ச் என்பது தில்லை அம்பலத்திற்கே வெளிச்சம். இது ஒரு ஸ்பூன், அது ஒரு ஸ்பூன் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் அள்ளும் என்பது சுவைக்கத் தெரிந்த வட்டாரத்திலிருந்து செய்தி. என்னைப் பொருத்தவரை இரண்டும் தனித்தனியாக சுவையாகவே இருக்கும்.