
தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 161, 72ஆவது பிரிவுகளின் கீழ் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப் படுகிறது. 71ஆவது பிரிவின் கீழ் மத்திய அரசிடமும், 161ஆவது பிரிவின் கீழ் மாநில அரசிடமும் முறையிடலாம். இதனை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.