
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
பச்சரிசி – 1 1/2 கப்
முழு உளுத்தம் பருப்பு – 1 கப் (தோல் நீக்கியது)
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
செய்முறை:
அரிசிகள், வெந்தயம், பருப்பை ஒன்றாக 4 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் அவ்வப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிக மிக மென்மையாக, மாவில் கொப்புளங்கள் வரும்வரை அரைக்க வேண்டும்.
அரவை முடிக்கும்போது உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிடவும்.
மாவை கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இந்த மாவில் அடுத்த அரைமணி நேரத்தில் தோசை செய்யலாம். அல்லது ஒரு 6,7 மணி நேரங்கள் வெளியே வைத்து, மாவைப் பொங்கவைத்தும் செய்யலாம்.
தோசைக் கல்லை சூடாக்கி, மாவை நடுவில் விட்டு, சுற்றி மெல்லிய வட்டமாகப் பரத்த வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, சிவந்ததும் திருப்பிப் போட வேண்டும். சுலபமாகத் திருப்ப முடியும்.
அடுத்தப் பக்கம் அதிக நேரம் வேகத் தேவை இல்லை. இதற்கு, கல்தோசை என்று பெயர். கொஞ்சம் மொறுமொறுப்பாக வரும்.
மொறுமொறுப்பில்லாமல் கொஞ்சம் சாஃப்டான தோசை தேவை என்றால் பச்சரிசியை அதிகரித்து புழுங்கலரிசியைக் குறைத்தோ (2:1) அல்லது முற்றிலும் பச்சரிசி மட்டுமே உபயோகித்தோ செய்யலாம். இதற்கு மெதுதோசை என்று பெயர். பச்சரிசி தோசை ஸ்பான்ச் மாதிரி இருக்கும்.
தோசைக்கான அந்தச் சிவந்த நிறத்தை, வெந்தயம் தருகிறது.