Header Banner Advertisement

நினைவு என்பது என்ன?


www.villangaseithi.com

print
சில விவரங்கள் நினைவில் இருக்கின்றன. சில மறந்த போகின்றன. நினைவு என்பது என்ன? எல்லாம் நியூரான்களின் சாகசம். நியூரான் (Neuron) என்பது மூளையில் உள்ள ஆதாரமான நரம்பு செல். கோடிக்கணக்கில் இருக்கும் இந்த செல்களின் இணைப்பில்தான் நம் நினைவு இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அறிவியலறிஞர்கள் ஒரு பாட்டி நியூரானைத் தேடினார்கள். அதாவது உங்கள் பாட்டியை உங்களுக்கு நினைவு இருந்தால் அவள் முகத்திற்கு ஒரு நியூரான் இருக்கிறது.
குரலுக்கு ஒரு நியூரான் இருக்கிறது. அவள் வாசனைக்கு ஒரு நியூரான் இருக்கிறது. இப்படித்தான் நம்பினார்கள். இப்போது தனிப்பட்ட நியூரான்களில் நம் நினைவு இல்லை என்கிறார்கள். பாட்டி நினைவுகள் நியூரான்களின் இணைப்பில் ஏற்படுத்திய மாறுதல்களில்தான் வகிக்கிறது என்கிறார்கள். நினைவு என்பது வீடியோ காமிரா போலவோ, டேப்ரிக்கார்டர் போலவோ இல்லை. இன்ன இடத்தில் இது பதிந்திருக் கிறது என்று சொல்ல இயலாது.

மேலும் ஒரு சம்பவத்தை முழுவதும் நினைவுபடுத்துவது என்பது சாத்தியமில்லை. ஒரு சம்பவத்தை வெவ்வேறு செய்தித்தாள்கள் விவரிப் பதைப் படித்தால் உங்களுக்கு இது புரியும். மிகத்தளிவான நினைவிலும், நினைவு கூர்வதிலும் சில குறைபாடுகள் இருக்கும். அரிதான சம்பவங்கள், விபத்துக்கள், அனுபவங்கள் தௌ¤வாக நினைவி ருக்கும். தினம் அலுவலகம் செல்வது நினைவிருக்காது. பேருந்து சன்னல் வழியாக ஒரு கல் வந்து விழுந்தால் அந்த தினம் நினைவிருக்கும்.

காரணம் அந்தச் சம்பவம் தனிப்பட்டது. நினைவு ரீதியில் குழப்பமில்லாதது. எந்தச் சம்பவத்தையும் நாம் நினைவு படுத்தும்போது நாளாக நாளாக அது மாறுகிறது. நடந்ததிலிருந்து நடந்ததாக நாம் நினைக்க விரும்புவதற்கு மாறிவிடும். மனமும், சுவையும் நம் நினைவுகளுடன் ஒன்றியிருப்பவை. ஒரு மகிழம்பூ வாசனை, உங்களைப் பள்ளிப் பருவத்தில் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண்ணின் நினைவுக்கும் கொண்டு போகலாம்.

“மற்றதெல்லாம் அழிந்தபின், உடல் அழிந்தபின் மணமும், ருசியும்தான் தனிப்பட்ட விசுவாசமான உணர்ச்சிகளாக மிச்சமிருக்கும்” என்றார் மார்செல் பிரௌஸ்ட். நம் எல்லோருக்கும் நினைவு ஆற்றலை இழப்பதில் இருக்கிறது. இது வயதாகிக் கொண்டிருப்பதால் நிகழ்கிறது என்று நம்புகிறோம். உண்மையல்ல. பிறந்த கணத்திலி ருந்து நாம் நியூரான்களை இழந்து கொண்டிருக்கிறோம். நியூரான்கள் புதுப்பிக்கப்படுவதில்லை.

நன்றி: சுஜாதா, விகடன்