
print
இந்தியா எப்போதுமே வன்முறையை நாடாத அமைதி நாடு. உலகில் பல நாடுகள் புரட்சிகளை, போராட்டங்களை நடத்தி பெற்ற சுதந்திரத்தை இந்தியா அஹிம்சையில் செய்து சாதித்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் அதே அஹிம்சை முறையில் தான் கையில் எடுத்துள்ளார்கள் அன்னா ஹசாரே போன்றவர்கள்.
அதேபோல்தான் நிலவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயன்று வந்தன. இதற்காக அமெரிக்க விண்வெளி மையமான நாசா நிலவின் தரை பகுதியில் ஓர் ஏவுகணை தாக்குதல் தொடுத்து ஆய்வு செய்ய முடிவெடுத்தது. ஏவுகணை தாங்கிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி வைத்தது.
‘ஏவுகணையை கொண்டு தாக்கும் போது ஆறு மைல் உயரத்துக்கு தூசு, வாயு போன்ற பொருட்கள் வெடித்து கிளம்பும். அதன் தொடர்ச்சியாக நீர் இருந்தால் வெளியேவரும்’ என்பது நாசாவின் திட்டம்.
நிலவில் இப்படி ஏவுகணை மோதி ஆய்வுகள் நடத்திக்கொண்டு இருக்கும் போதே மறுபக்கம் இந்தியா அனுப்பிய சந்திராயன், நிலவில் நீர் இருப்பதற்கான ஆதரங்களை முதன் முதலாக கண்டுபிடித்து அனுப்பி வைத்தது. சந்திராயன் அனுப்பிய தகவல்களை தீவிரமாக ஆராய்ந்த நாசா 2009 செப்டம்பரில் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.
ஒருபக்கம் வன்முறையாக அமெரிக்கா ஏவுகணையை கொண்டு நிலவை தகர்த்துக் கொண்டிருக்கும் போது எந்தவித தாக்குதலும் நிலவில் நடத்தாமல் அஹிம்சை முறையில் நீர் இருப்பதை கண்டுபிடித்திருப்பது இந்தியாவின் சிறப்பான சாதனை.
சுதந்திரம் முதல் நிலவில் நீர் இருப்பது வரை சாத்வீகமான முறையில் அஹிம்சை வழியில் தெரிந்து கொண்டு உலகுக்கு அறிவித்தது. அதையே விஞ்ஞானமும் செய்கிறது.