
![]() |
ஜோசப் புலிட்சர் |
அமெரிக்காவில் சிறிது காலம் ராணுவச் சேவையில் ஈடுபட்டபின், செயிண்ட் லூயிக்கு சென்றார். சின்ன சின்ன தொழில்களை செய்து பிழைத்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்ந்தார். நாலே ஆண்டுகளில் அதாவது அவரது 24ஆவது வயதில் அந்த பத்திரிகையின் உரிமையாளர் களில் ஒருவராகவே ஆனார். அதுமட்டுமா…? நஷ்டத்தில் நிறுத்தப்படும் சூழலில் இருந்த வேறொரு பத்திரிகையைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அதை தரகர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு கைமாற்றினார். இதன் மூலம் 7,000 பவுண்டுகளைச் சம்பாதித்தார்.
இதுமட்டுமா…? பின்னர் புலிட்சர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. ஆங்கில மொழி, சட்டம், அரசியல் ஆகியவற்றில் வல்லுநரானார். சரியாக நடத்தப்படாமல் இருந்த மேலும் 2 ஆங்கில நாளிதழ்களை விலைக்கு வாங்கினார். இரண்டையும் ஒன்றாக இணைத்து ‘செயிண்ட் லூயி போஸ்ட் டெஸ்பாட்ச்’ என்ற பத்திரிகையை உருவாக்கினார். அரசியல் வாதிகளின் முகத்திரைகளையும் அரசாங்கத்தின் திரைமறைவு நிகழ்வுகளையும் போர்க் கொடூரங்களையும் தைரியமாக தோலுரித்துக் காட்டினார்.
![]() |
1972ல் நடந்த வியட்நாம் – அமெரிக்க போரின் கோர காட்சி. புலிட்சர் விருதைப் பெற்ற புகைப்படம் இது. |
40 வயதில் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராவோம் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், பல பத்திரிகைகளின் கண்களை திறந்து விட்ட புலிட்சர் தன் கண்பார்வை முழுவதும் இழந்தார். பார்வையை இழந்தாலும் சிறந்த அறிவாளிகளின் துணை கொண்டு மேலும் சிறப்படைந்தார்.