Header Banner Advertisement

பெண்மையை அதிகரிக்க செய்யும் கல்யாண முருங்கை


Untitled

print
‘கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும்’ என்றொரு பழமொழி உண்டு. கல்யாண முருங்கையின் மகத்துவம் அப்படிப்பட்டது. சித்த மருத்துவம் இதைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுகிறது. அதில் பெண்களுக்காக பிரத்யேகமாக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்று கல்யாண முருங்கையை சொல்கிறது. பெண்மை சார்ந்த எந்த நோயும் இந்த செடி இருக்கும் வீடுகளில் வராது என்பது காலங்காலமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம்.
கல்யாண முருங்கை
ஒரு பெண்ணுக்கு பெண்மையை அளித்து, அவளை அழகாக காட்டுவது ஹார்மோன்தான். இதை ‘நாளமில்லா சுரப்பி’ என்கிறார்கள். இந்த சுரப்பில் ஏதேனும் கோளாறு இருந்தால் அந்தப் பெண் பெண்மை குறைவு உடையவராகவே இருப்பார். அதை நிவர்த்தி செய்யக்கூடிய தன்மை இந்த கல்யாண முருங்கை இலைக்கு உள்ளது.

இந்த இலையை அடையாக செய்து சாப்பிடலாம், தோசையாகவும் செய்யலாம். சூப்பாகவும் பருகலாம். இதனால் பெண்மைக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பெண்ணின் அழகும் கவர்ச்சியும் கூடும்.

பெண்மைக்கு மட்டுமல்ல, குழந்தைப் பேறுக்கும் இது உதவுகிறது. இன்றைய பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் அதிகம் இருக்கிறது. அவற்றை இந்த கல்யாண முருங்கை இலை அற்புதமாக குணப்படுத்துகிறது. கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி சரியாக இருக்க’எண்டோமேர்டியம்’ என்ற சதைப் பகுதி கர்ப்பப்பையின் உள்ளே வளருகிறது. இந்த சதை வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கரு அதனுடன் ஒட்டி குழந்தையாக உருவெடுக்கும்.

இன்று பெண்கள் துவர்ப்பான, நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதில்லை. துரித உணவு, மன அழுத்தம் போன்ற பலவற்றாலும் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய கருப்பை உட்புற சதை வளர்ச்சி ஏற்படுவதில்லை. அது பெரும்பாலும் குறைவுடையதாகவே உள்ளது. அதனால் கரு உருவாகாத நிலை, உருவான கருவும் வளர்ச்சி அடையாமல் சிதைவுறும் நிலை உருவாகிறது.

இதனால் பெண் தாய்மை அடைய முடியா நிலை ஏற்படும். இதற்கு கல்யாண முருங்கை மரத்தின் பட்டையை கொஞ்சம் எடுத்து லேசாக இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டச் செய்தபின் அதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பையின் உட்புறச் சதை வளர்ச்சி மேம்படும். கரு உருவாகும். உருவான கருவும் கர்ப்பப்பையில் நிலைத்து நின்று வளர்ச்சிப் பெறும்.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் வாயிற்று வலி, உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய இதன் இலை போதும். வலி பறந்து போகும். இன்றைய பெண்கள் வலிக்கு வலி மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். அது கர்ப்பப்பையை தளர்த்தி, சினைப்பையையும் தளர்த்திவிடும். இதனால் வீரியமிக்க கருமுட்டை உருவாகாமல் போகும். மலட்டுத்தன்மை ஏற்படும். அதனால் வலி மாத்திரைகளை தவிர்க்க வேண்டும்.

நமது முன்னோர்கள் வீட்டில் அழகுக்காக வளர்த்ததாக நினைத்த கல்யாண முருங்கையில் இத்தனை நன்மைகள் இருக்கின்றன. முழுக்க முழுக்க பெண்மையை மெருகேற்றி தாய்மையை உருவாக்கவே வளர்க்கப்பட்டிருக்கிறது. நாமும் நமது வீடுகளில் அழகுக்காக குரோட்டன்ஸ் போன்ற எதுக்கும் உதவாத செடிகளை வார்ப்பதற்கு பதிலாக கல்யாண முருங்கையை வளர்க்கலாம். நமது பெண்களின் பெண்மையை அதிகப்படுத்தியது போலும் இருக்கும், வீட்டுக்கு அழகும் கிடைக்கும்.!