
அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகப் பெரிய திருவிழா இந்த சித்திரைத் திருவிழாதான். மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருமணத்தை காண்பதற்காக அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் பல்லக்கில் வருவதாக ஐதீகம். இந்த நிகழ்வுகள் அழகர் கோயிலில் தொடங்கி மதுரை வந்து வைகை ஆற்றில் எழுந்தருளி அதன்பின் வண்டியூரில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன்பின் மதுரையிலிருந்து மீண்டும் அழகர்கோயில் சென்று சேர்வார்.
அதன் முதல் நாள் நிகழ்வான கள்ளழகர் அழகர் கோயிலிருந்து மதுரை புறப்படும் நிகழ்ச்சியை இந்த வீடியோவில் முழுமையாக காணலாம்.