
இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் விஜயலெட்சுமி பண்டிட் (உ.பி.).
இந்திய மாநில சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் ஷான்னோ தேவி.
இந்தியாவில் பெண் மருத்துவராக பணியாற்றிய முதல் பெண் மருத்துவர் முத்து லெட்சுமி ரெட்டி.
இந்தியாவிலேயே சட்டமன்ற துணை சபாநாயகராக பதவியேற்ற முதல் பெண் முத்து லெட்சுமி ரெட்டி.
தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை முதலில் அமுல்படுத்திய முதல் இந்திய பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி.
இந்திய அரசின் உதவித்தொகைப் பெற்று அயல்நாடு சென்று உயர்கல்வி பயின்ற முதல் இந்திய பெண் முத்துலெட்சுமிரெட்டி.
![]() |
முத்துலெட்சுமிரெட்டி. |
தண்டி யாத்திரையில் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி சரோஜினி நாயுடு.
ராஜ்யசபாவின் முதல் பெண் செயலாளர் வி.எஸ்.ரமாதேவி.
ஜிப்ரால்டர் ஜலசந்தியை நீந்திக் கடந்த முதல் இந்திய பெண் ஆர்த்தி பிரதான்.
இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் வசந்தகுமாரி (கன்னியாகுமரி).
இந்தியாவின் முதல் பெண் டீசல் எஞ்சின் டிரைவர் மும்தாஜ் கத்வாலா.
இந்தியாவின் முதல் பெண் பைலட் சுசாமா.
இந்தியாவின் முதல் ஏர்பஸ் பெண் பைலட் தாபா பானர்ஜி.
இந்தியாவின் முதல் பெண் கிருஸ்துவ மதகுரு மரகதவல்லி டேவிட் (28.05.1989).
முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுசீலா சௌராஸியா.
ஞானபீடம் பரிசுப் பெற்ற முதல் இந்திய பெண் ஆஷா பூர்ணாதேவி (வங்காள எழுத்தாளர்).
இந்தியாவின் முதல் பெண் சுதந்திர புரட்சியாளர் கிட்டூர் ராணி சென்னம்மா.
![]() |
கிட்டூர் ராணி சென்னம்மா. |
இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறைத் தண்டனைப் பெற்ற முதல் பெண் துக்கரி பாலர் தேவி.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சாந்தகுமாரி பட்நாகர்.
இந்தியாவில் போலோ விளையாடும் முதல் பெண்மணி தேவயாணி ராவ் (டெல்லி).
இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜெனரல் மேஜர் ஜெனரல் கொட்ரூட் அலிராம்.
பதம்ஸ்ரீ விருதுப்பெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ்தத்.
பெண்கள் கைப்பந்தாட்டத்தில் முதன்முதலாக அர்ஜூனா விருது பெற்ற முதல் இந்திய பெண் மியூனிலி ரெட்டி.
![]() |
ஆஷா பூர்ணாதேவி |
பி.சி.ராவ் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர் லலிதா காமேஸ்வரன்.
எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி சந்தோஷ் யாதவ் (ஹரியானா) (1992, 1993).
இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண் சி.என்.ஜானகி (இந்தியா, 28-07-1992).
இந்தியாவில் மனை இயல் பாடத்தை முதலில் அறிமுகப்படுத்திய பெண்மணி ஹன்சா மேத்தா.
விடுதலைப் போராட்ட காலத்தில் முதன் முதலில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய முதல் பெண் காடம்பினி கங்குலி (1901).