Header Banner Advertisement

விலங்குகளுக்கு தாய்ப்பால் தரும் பெண்கள்


poverty_660_080213110020

print
ன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்கேட்டை பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள். சமீபத்தில் தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சீர்கேட்டின் வரலாறு இன்று நேற்று தொடங்கியது அல்ல. அது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தொடங்கி விட்டது.

உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் முதல் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரோமானியர்கள்தான். அவர்கள்தான் இந்த சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், பிள்ளையார் சுழி போட்டார்கள். ஆனால் அது ‘விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல்’என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள்.

மான்குட்டிக்கு பால்
கி.மு.400-க்குப் முன், அதாவது 2400 வருடங்களுக்கு முன்பு நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் ஒரு உபயம் கையாண்டார்கள். அந்த மதுவில் காரியம் கலந்த ஒரு ரசாயனத்தை கலந்தனர். இந்த ரசாயனம் மதுவுக்கு ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. அதேவேளையில், இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநிலை பாதிப்புக்கும் காரணமானது. இந்த மது உடலுக்குள் சென்று அது எலும்புகளையும் பெரிதாக பாதித்திருக்கிறது. ரோமப் பேரரசர்களின் எழும்புக்கூடுகள் பலவற்றில் மிக அதிகமான அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.மு.வில் ரோமப்பேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால் கி.பி.யில் கிட்டத்தட்ட 2000 வருடங்கள் கழித்து, நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்தது.

கன்றுக்குட்டிக்கு பால்
கி.பி.1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் மன்னர் அஜய்சிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கு ஏற்ற இடமாக ‘மார்வார்’ என்ற வனப்பகுதியை தேர்ந்தெடுத்தார். அதுவொரு அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி. அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை எல்லாம் வெட்டியாக வேண்டும். அந்த வேலையை முடித்து வருவதற்காக மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார்.

அந்த பகுதியில் ‘பிஷ்ணோய்’ என்ற இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இயற்கை விரும்பிகள். இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போனார்கள். பிஷ்ணோய் மக்கள் தங்களால் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர். இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துபோனது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு பிஷ்ணோய் இனத்துப் பெண்ணும் ஒரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். கட்டிப்பிடித்த பெண்களை வெட்டிபோட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.

மரத்துக்காக உயிர் விட்ட பெண்கள்
படை வீரர்களும் சலைக்காமல் பெண்களையும் அவர்கள் கட்டிப்பிடித்திருந்த மரத்தையும் வெட்டினார்கள். இப்படியாக, 363 மரங்களையும் கட்டிப் பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய பின்புதான் மன்னனின் மனம் லேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று தனது போர் வீரர்களை திரும்பி வர கட்டளை இட்டார்.
மரத்தைக் காக்கும் பெண்கள்
பிஷ்ணோய் மக்களின் இந்த போராட்டம் அமிர்த தேவி என்ற பெண்ணின் தலைமையில் நடந்தது. இது தான் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதல் போராட்டம்’. அதை நினைவு படுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை ‘சிப்கோ இயக்கம்’ என்று கொண்டாடுகிறார்கள்.

பிஷ்ணோய் இன மக்கள் இயற்கையைப் போலவே விலங்குகளையும் உயிராக நேசிப்பவர்கள். மான்களை அவர்கள் தெய்வமாக வழிபடுபவர்கள். விலங்குகளின் தாய் அந்த குட்டிகள் சிறியதாக இருக்கும் போது இறந்துவிட்டால், அந்த குட்டிகளை தங்களின் தாய்ப்பாலை தந்து வளர்ப்பார்கள்.

ஆட்டுக்குட்டிக்கு பால்
ஒரு மார்பகத்தில் குழந்தையும், மறு மார்பகத்தில் குட்டி விலங்கும் பால் அருந்துவது இங்கு சர்வசாதாரணமான காட்சி. பெற்ற குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் நாகரிக பெண்கள் மத்தியில் விலங்குகளுக்கு கூட தனது பாலைக் கொடுத்து காப்பாற்றும் பிஷ்ணோய் இன பெண்கள் மிக மிக உயர்ந்தவர்கள். அவர்களைப் போற்றுவோம்..!