Header Banner Advertisement

பச்சோந்திகள்


Untitled

print

து அரசியலில் நிறம் மாறும் பச்சோந்திகளைப் பற்றிய கதையல்ல. நிஜ பச்சோந்திகள் பற்றிய கதை. இயற்கையின் அற்புதப்படைப்புகளில் ஒன்றுதான் இந்த பச்சோந்திகள்.

பச்சோந்திகள் இடத்திற்கு ஏற்றவாறு தம் நிறத்தை மாற்றிக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்கின்றன. அதே வேளையில் தமக்கு வேண்டிய இரையை பிடிப்பதற்கு மறைந்து கொள்ள வசதியாகவும் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.

பச்சோந்திகள் எல்லாவற்றாலும் நினைத்தவுடன் நிறம் மாற முடியாது. சிலவகை பச்சோந்திகள் மட்டும் தான் நிறம் மாறும் குணம் கொண்டவை. அப்படி நிறம் மாறும் பச்சோந்திகள், பிங்க், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, கருப்பு, பிரவுன், மஞ்சள் என்று நினைத்த நொடியில் நிறம் மாறிக் கொள்ளும்.
பச்சோந்திகள் இடத்துக்கு தகுந்த மாதிரி தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்றுதான் பெருமான்மையனவர்கள் நினைக்கிறார்கள். அது அத்தனை உண்மையில்லை. இடத்தைவிட பச்சோந்தி தனது எண்ணத்துக்கு ஏற்றபடிதான் தன நிறத்தை மாற்றிக்கொள்கிறது என்பதுதான் உண்மை. அது அப்படி நிறம் மாறினால் சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது மற்ற பச்சோந்திகளுக்கோ ஏதோ ஒரு செய்தி சொல்கிறது என்று அர்த்தம். நிறம் செய்தியை சொல்கிறது.
அதேபோல் சூழலுக்கு தகுந்தபடி தன்னை கண்டுபிடிக்க முடியாத படி மறைந்து கொள்ளும் முறைக்கு ‘காமோ ப்ளாஜ்’ என்று பெயர். அதாவது பூக்களும் இலைகளும் சேர்ந்திருக்கும் இடம் என்றால் அதே பூக்களின் நிறமும் இலைகளின் நிறமும் உடலில் யாரோ வரைந்ததுபோல் தனது நிறத்தை டிசைனாக மாற்றிக்கொள்ளும். உற்றுப்பார்த்தால் கூட இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. இந்த வகை பச்சோந்திகளை ‘ஸ்மித்ட்வார்ப்’என்கிறார்கள். இப்போது இந்தவகை பச்சோந்திகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அழியும் நிலையில் உள்ளது.
பச்சோந்திகளுக்கு நிறத்தை கொடுப்பது அதன் நிறமிகள்தான். நமது உடலில் இருக்கும் நிறமிகள் சூரியஒளி பட்டால் நமது தோலை கறுப்பாகும். சூரியஒளியே படாவிட்டால் வெளிறிப்போகும். இதே முறையில்தான் பச்சோந்திகளின் தோலுக்கு கீழே இருக்கும் நிறமிகளும் செயல்படுகின்றன. உடலில் உள்ள வெவ்வேறு நிறமிகளை திறந்து மூடுவதன் மூலம் தங்கள் நிறத்தை மாற்றிகொள்கின்றன.
நமது தலை முடியை கருமையாக்கி காட்டுவது கூட நிறமிகளின் இயக்கத்தால் தான். நிறமி தனது செயல் திறன் குறையும் போது முடி வெள்ளையாக மாறுகிறது. ஏனென்றால், முடியின் இயற்கையான நிறம் வெள்ளைதான். மனிதனுக்கு எப்படி வயதாகும் போது நிறமிகளின் செயல் திறன் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை முடிகள் தலை காட்டுகிறதோ அதே போல்தான் பச்சோந்திகளின் நிறமிகளும் இருக்கின்றன. வயதாகும் போது செயல் திறன் குறைகிறது.
பச்சோந்திகளின் நிறம் மாற வெளிச்சமும், தட்பவெப்ப நிலையும் அவசியம். இனப்பெருக்கத்தின் போது தம் இணையை கவர்வதற்காக தனது நிறத்தை மாற்றி வசியம் செய்யும்.
இப்படி நினைத்ததுடன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆட்டமெல்லாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரைதான். வயதானால் வலிமை போய் நிறமிகளும் செயல் இழந்து பச்சோந்திகளும் வெளிறிப் போய்விடும்.நினைத்தபடி நிறத்தை மாற்ற முடியாது. வயோதிகம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.
பச்சோந்திகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு பொருத்தமானவை அல்ல. ஆனால், மேலை நாட்டினர் எங்கே கேட்கிறார்கள்? வித்தியாசமாக சிந்திக்கிறேன் பேர்வழி என்று நிறையப் பேர் இவற்றை செல்லங்களாக வளர்த்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் பார்ப்பது உண்மையான பச்சோந்தியல்ல. இரண்டு பெண்கள் தங்கள் உடலில் வண்ணங்களை பூசிக்கொண்டு பச்சோந்தி போல் போஸ் கொடுக்கிறார்கள். அற்புதமான கலைப்படைப்பு!