
பொதுவாகவே பாம்புகளைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. அதிலும் நாகப்பாம்பு என்றால் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நாகப்பாம்பு என்றதும் அது கிட்டத்தட்ட 20 வருடங்களாக யாரையும் தீண்டாமல் சேர்த்து வைத்த விஷத்தை நாகரத்தினைக் கல்லாக கக்கும் விசித்திரம் இந்த பாம்புக்கு மட்டுமே சொந்தமானது. இந்த நாகரத்தினம் தானாகவே ஒளி தரக்கூடியது. அதனால் அமாவாசை இருட்டில் நாகப்பாம்பு இதன் வெளிச்சத்தில் இரை தேடும். பாம்புக்கு பயன்படும் இந்த ரத்தினக்கல்லை மனிதன் வைத்திருந்தால், அவன் மிகப் பெரிய உயரத்தை அடைவான்.